St Our Ceylon News: கவிதை
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 மார்ச், 2021

சாம்பல் பறவைகள்.... -

சும்மா செத்தவர்கள் நாம் என்று

சும்மா கணக்கிட்டீரோ...?
ஷஹாதாவை மொழிந்து
சாகா வரம் பெற்றவர்கள் நாங்கள்...
மறுமை வாழ்வுக்கும் சேர்த்து
பயணச் சீட்டோடு வந்தவர்கள் நாங்கள்
பயந்து பயந்து போவதற்கு
எங்கள் பகுத்தறிவொன்றும்
பூச்சியமானதல்ல...
பறவைகளில் நான்கைப் பிடித்து
அவற்றை மை போல அரைத்து மாவாக்கி
ரொட்டி உருண்டைகள் நாலாக்கி
நாற்திசை மலைகளில் வைத்தாலும்
மறுபடியும் அதே பறவைகளாய்

செவ்வாய், 21 மே, 2019

வீராப்புடன் எழுவோம் - கவிதை

நீங்கள் புனித யுத்தம் புரிந்ததால்
இருபது இலட்சம்
நாங்களல்லவா புதைகுழிக்குள்
புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேடு கெட்ட
கேணப்பயல்கள் செய்த
கோழைத்தனத்தால்
நாம் கோவணம் இழந்து
கூனிக் குறுகிப் போகிறோம்.

வியாழன், 14 ஜூன், 2018

நாளை நோன்பா இல்லை பெருநாளா?

மெய்ப்பொருள் கண்டும்
மௌனம் சாதிப்பதேன்?
மென்றொழிக்கும் தன்மை
மேலவனால் அறியாததா?

மெல்லிய இளங்கீற்று இளம்பிறை
மெல்லிதாய் ஒருசிறுபொழுது
மௌனித்துச் செல்வதைச் சிலர்
மேகமூட்டத்துடன் கண்டு
மேலவன் பேரில் சத்தியமிட்டு
முஸ்லிம் நான்தான் சொல்கிறேனென
முழங்கியும் மௌனம் காப்பதேன்?

முஸ்லிம்களுக்கு நன்மைநாடும்
மரியாதை மிகு உலமாக்களே
முந்துங்கள் உண்மையை உலகிற்கு
முந்திச் சொல்ல நீங்கள்....

முழங்குங்கள் உண்மைகண்டு
நாளை பெருநாளா?
இல்லை நோன்பா? என்று

தயவுசெய்து உங்கள் பத்வாக்களை
ஸஹரின் பின்னர் சொல்லாதீர்கள்...

பலரின் “பத்வா”க்கள்
உங்கள் பத்வாக்களுக்கு எதிராக
நீளும் என்பதை மறவாதீர்கள்...

உங்கள் தலைமையில்
மௌனித்து நிற்கும் மக்களின்
நன்மதிப்பைப் பெற்று
அல்லாஹ்விடம் குற்றவாளியாகாதிருக்க
இப்போதே...
இந்நிமிடமே
ஆராய்ந்து
அறுதியும் இறுதியுமாய்ச் சொல்லுங்கள்

நாளை நோன்பா?
இல்லை
பெருநாளா?

கூடவே,
பிறை பார்ப்பதற்கான தகுதியையும்
யார்தான் பார்க்க வேண்டும் என்பதையும்
இலங்கை முஸ்லிம்களுக்கு
“பெனர்” போட்டுச் சொல்லுங்கள்...

“அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...”

-கலைமகன் பைரூஸ்

ஞாயிறு, 3 ஜூன், 2018

சுவர்க்கத்தில் உனைக்காண ஆசை! -அஷ்ரஃப் சிஹாப்தீன்-

நெஞ்சமெலாம் பதறுதடி மகளே
நெடு துயிலுக் குனையாக்கி விட்டார்
அஞ்சாமல் நொந்தோர்க்கு உதவும்
அருமந்த மகளுன்னைக் கொன்றார்
வஞ்சகர்க்குத் தர்மமிலை என்னும்
வார்த்தையினை மீளெழுதிச் செல்வோர்
எஞ்சார்கள் என்பதனை மட்டும்
எதிர்கால வரலாறு பேசும்!
ஆயுதத்தில் அதிகாரம் வைத்து
ஆடியவர் கதைகளினை அறிவாய்
பேயுலவும் காடுகளைப் போலிப்
பெரு நிலத்தை ஆளவந்தோர் அழிந்தார்

அடி ரெபேக்கா நீயாடி அவள்? - கலைமகன் பைரூஸ்


இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும்
இல்லாதொழிப்பதற்காக
இஸ்ரேலிய மமதையோடு
இம்சிக்கின்றாய் காஸாவை...
அடி ரெபேக்கா நீயாடி - எம்
அடிநெஞ்சின் ஆழத்தில்
இஸ்லாத்தை ஏந்தி
இடர்படுவோர்க்கு நல்லன செய்த
பலஸ்தீன வீர மங்கை - தாதி
ரஸான் அல் நஜ்ஜாரை
குறிவைத்த மாபாவி?

ஷஹீதானாலும் பலஸ்தீனத்தின்
அசையாத நம்பிக்கைக் கொடியுடன்
எவ்விதப் பாரமுமற்ற - விலையற்ற
கவனுடன் வீரப் போர்செய்கின்ற
அல்லாஹ்வையே சதாவும் நினைக்கின்ற

சனி, 14 ஏப்ரல், 2018

எலிகளை ஏவிவிடுங்கள்!


நறுமணம் கமழ வேண்டிய மொட்டு
நாதாரிகளின் கைபட்டதனால்
சின்னாபின்னமாகி
யாரும் பேசுகின்ற பொருளாயிற்று!

காஷ்மீரில் பிறந்த மொட்டு
துள்ளிகின்ற சிட்டு
நாதாரிகளினால் கசக்கப்பட்டு
உலகமே பேசுகின்ற பொருளாயிற்று!

ஆம்,
ஆஷிபா....
அநியாயம் என்றால் ஏது என்று
அறியாத பிஞ்சு மனத்தாள்...
அம்மாவையும் அப்பாவையும்

புதன், 14 பிப்ரவரி, 2018

போராளிகளே நில்லுங்கள்!! (கவிதை)

போராளிகளே 
நில்லுங்கள் !
கொள்கைச்சூரியன்
தீப்பற்றி எரிகையில்
காணாமல் போனது
உங்கள் கண்கள்தானே??
பதவிக்கந்தலுக்காய்
சமூகத்தை நிர்வாணமாக்கிய
நீங்களா போராடப்போகிறீர்கள் ?
இலைகளை பிடுங்குவதாய்
உங்களுக்குள் நடந்த போரில்
அறுந்தல்லவா போயிற்று
எம் சுதந்திர வேர்..!

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

இரவுகளை எதற்காக நேசிக்கிறோம் மர்யம்?? (கவிதை)

இரவுகளை எதற்காக நேசிக்கிறோம் மர்யம்??
இரவுகளும் நம்மை நேசிப்பதாலா ??
உயிரே நேசமென்பது என்னடா??
ஆரவாரம் நிறைந்த நெடும் பாதைகளில்
அமைதியை வாசி்த்திருக்கிறாயா??
இன்று அதைத்தான் காணப் போனோம்.
இரவுகள் மொத்தமாக எத்தனை ஜாமங்களை உடையன??
அந்திம ஜாமம் கல்பு கலங்கும் தஹஜ்ஜத்துக்கு ஒதுக்குவோம்.
நெரிசல்களால் துவண்ட பாதை
நீயும் நானுமெனும் ஒரே உயிரின் நடையில் அழகாகிறது.
கடிகாரங்களின் காதலியே

செவ்வாய், 26 டிசம்பர், 2017

நிறம் மாறிய பொழுதொன்றில் நதி!

நேரமெடுத்து விசாரியுங்கள்.
கடல் கொண்ட காதல்
நதியோடு ஒட்டிக் கொண்டு
கலவியாடித் தழுவி
நனைந்திருக்கும்.
செவிமடுத்துக் கேளுங்கள்.
இரைச்சலோசையோடு வடிந்தோடும்
நதி நீர்த் தேடலில்
மெல்லிய மெளனமொன்று புதைந்திருக்கும்.
விழி விரித்துப் பாருங்கள்.
பொருளுணராது நகரும்
நதியின் வலித் தழும்புகளைத் தழுவி விட
காற்றுத் தென்றலடிக்கும்.