நாவலப்பிட்டியிலிருந்து
நானுஓயா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க்
கொள்கலனொன்று ஒன்று நேற்று (03) அன்று மாலை 5.45 மணியளவில் தடம் புரண்டதால்
மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்று இரவு 9.45 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு,
மலையக புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்
கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.