கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரை மண்ணுக்குள் அடக்கினால் அப்புதை குழிக்குள் கசிந்துவரும் நீரின் மூலம் நோய்க் கிருமிகள் வெளியே பரவும் என்ற ஒரு புதுமையான மருத்துவச் சித்தாந்தத்தை உலகிலேயே முதன்முதலாகச் சிருஷ்டித்து, அந்நோயினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கவேண்டுமெனக் கட்டளை பிறப்பித்த ஒரே நாடு இலங்கை. ஒருவேளை அதன் தோழமை நாடான