விசேட வைத்தியர்களின் இடமாற்ற நடைமுறைக்கு முரணான வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையினால் இந்த நியமனத்திற்கு பிரசவ மற்றும்
மகப்பேற்று விசேட நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சுகாதார சேவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஜயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவராக எல்பிட்டிய வைத்தியசாலையில் பிரசவ மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணராக கடமையாற்றிய டொக்டர் திலகரத்ன அவர்களே நியமிக்கப்பட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சராக இருந்த பிரதமர் ஹரினி அமரசூரியவினால் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, தற்போது காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் கடமையாற்றும் வதிவிட விசேட வைத்தியர் இடமாற்றம் செய்யப்பட்டமையினால் அந்த பதவி வெற்றிடமாக உள்ளதாகவும், அந்த வெற்றிடத்திற்கு ஜயவர்தனபுர தலைமை வைத்தியரை நியமிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த நியமனம் விசேட வைத்தியர்களின் இடமாற்ற நடைமுறையை மீறிய செயலாகும் எனவும், முறையான முறைப்படி அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ள வைத்தியர் சந்தர்ப்பத்தை இழந்துள்ளதாகவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரச சேவை ஆணைக்குழுவின் முறையான அனுமதியின்றி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரசவ மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர்கள் அமைச்சுடன் இணைந்து இந்த நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
-'மவ்பிம'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக