St Our Ceylon News: காத்தான்குடியில் பல குரல்களில் குர்ஆனை ஓதிக்காட்டினார் காரி முகம்மத் சஆத் நுமானி...
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

காத்தான்குடியில் பல குரல்களில் குர்ஆனை ஓதிக்காட்டினார் காரி முகம்மத் சஆத் நுமானி...

 காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் பல குரலில் அல்-குர்ஆனை ஓதும் சவூதி அரேபியா இமாம் அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி விஜயமொன்றை மேற்கொண்டார்.

புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானிக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இன்றைய ஜூம்ஆ குத்பா மற்றும் தொழுகையினையும் நடத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி பல குரலில் அல்-குர்ஆனை ஓதிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினால் அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானிக்கு கௌரவம் வழங்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக