அந்தத் திகதிக்குப் பிறகு வழங்கப்பட்ட ஸிம் அட்டைகளுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள்
பொருந்தும். எனவே, 2019-08-02 க்கு முன்பு பதிவு செய்த சில சந்தாதாரர்கள் பற்றிய தகவல்கள் தொலைபேசி இயக்கும் நிறுவனங்களிடம் இல்லை, இது சில சட்ட விசாரணைகளில் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.16 முதல் 17 வயதுக்குட்பட்ட சந்தாதாரர்களைப் பதிவு செய்தல் மற்றும் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஸிம் அட்டைகளை வழங்குதல் தொடர்பான புதிய ஏற்பாடுகளை இணைத்து தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு தற்போதுள்ள விதிமுறைகளைத் திருத்த வேண்டியதன் அவசியமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன்படி, எண்ம (டிஜிட்டல்) பொருளாதார அமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிபதி அவர்களால் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும், 2019-08-02 க்கு முன்னர் பெறப்பட்ட ஸிம் அட்டைகள் தொடர்பான சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கும், தற்போதுள்ள 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சந்தாதாரர் ஸிம் அட்டை (சந்தாதாரர் அடையாள தொகுதி - ஸிம்) பதிவு விதிமுறைகளை பொருத்தமான வகையில் திருத்துவதற்கும் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.
நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக