St Our Ceylon News: 20 ஆம் திகதிக்கு முன்னர் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கவும்!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

சனி, 6 ஜனவரி, 2018

20 ஆம் திகதிக்கு முன்னர் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கவும்!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்று  தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த உத்தரவை மீறி நடாத்திச் செல்லப்படுகின்ற காரியாலயங்கள் மற்றும் சுவரொட்டிகள் அனைத்தையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள்
ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வேட்பாளர்களும் தமது வருமானங்களையும் சொத்துக்களைப் பற்றிய விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வணக்கஸ்தலங்களில் வேட்பாளர்கள் சார்பாக மத நிகழ்வுகள் இடம்பெற்றால் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டால் வேட்பாளர்களுக்கு எதிராக மட்டுமன்றி மத ஸ்தலங்களின் குருக்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக