St Our Ceylon News: பஸ் நடாத்துநர்களாக பெண்கள் நியமனம்
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

பஸ் நடாத்துநர்களாக பெண்கள் நியமனம்

இலங்கை போக்குவரத்து சபை (CTB) பஸ் நடத்துநர்களாக வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 20 பெண்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (06) மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தில் (Makumbura Multimodal Transport Centre) நடைபெற்றது.
பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துநர்களுக்கு புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SLTB-ல் உள்ள ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக