பட்டதாரிகள் 4000 பேருக்கு அரச தொழில்
வாய்ப்பினை வெகு விரைவில் வழங்குவதற்கு அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சைகளில்
கலந்துகொண்டு அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட 4000 பட்டதாரிகள் அரச தொழில்
வாய்ப்புப் பெறவுள்ளனர். அவர்களை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக
இணைத்துக் கொள்ளவே அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
(கேஎப்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக