St Our Ceylon News: எங்கும் தேசியக் கொடியை ஏற்றுங்கள்! வஜிர அபேவர்த்தன
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

எங்கும் தேசியக் கொடியை ஏற்றுங்கள்! வஜிர அபேவர்த்தன

நாட்டின் 70 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ம் திகதி முதல் 07ம் திகதி வரை  அனைத்து அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். 
அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 

இம்முறை சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறினார். 

அத்துடன், 70ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வின் போது விஷேட அதிதியாக பிரித்தானிய அரச குடும்பத்தைப் பிரதிநிதித்துவம் செய்து எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக